இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 373- பேர் உயிரிழப்பு


இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 373- பேர் உயிரிழப்பு
x

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 845- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவியது. ஒருபக்கம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், இன்னொரு புறம் உருமாறிய புதிய வகை கொரோனா காட்டுத்தீ போல பரவி, அந்நாட்டுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு மீண்டும் அமல்படுத்தியது. தடுப்பூசி போடும் பணியையும் முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 845- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 39,45,680- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் மேலும் 373- பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,12,465- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 19,17,586- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story