"சீனா அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிக்கிறது" - அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம்


சீனா அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிக்கிறது - அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 10 Feb 2021 8:25 AM GMT (Updated: 10 Feb 2021 8:25 AM GMT)

சீனா அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிக்கிறது எனக் குற்றம் சாட்டியிருக்கும் அமெரிக்கா, இந்தியா - சீனா எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஆதரவளிப்பதாக கூறியுள்ளது.

வாஷிங்டன்,

இது தொடர்பாக வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:-

சீனா தன்னுடைய அண்டைய நாடுகளை மிரட்ட முயற்சிப்பதால் கவலையடைந்துள்ளோம். பிராந்தியத்தில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும். மேலும் இந்தியா - சீனா மோதல் விவகாரத்தில் அங்கிருக்கும் நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

அமெரிக்கா, இந்தியா - சீனா எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க ஆதரவு அளிக்கின்றோம். இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவது தங்களுக்கு தெரியும். மேலும் இருநாடுகளும் எல்லை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க அமெரிக்க துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story