அஸ்ட்ரா செனகா தடுப்பூசி திட்டத்தை கைவிட்டது தென் ஆப்பிரிக்கா


அஸ்ட்ரா செனகா தடுப்பூசி திட்டத்தை கைவிட்டது தென் ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 10 Feb 2021 11:10 PM GMT (Updated: 10 Feb 2021 11:10 PM GMT)

அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது கைவிடுவதாக தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது.

ஜோகன்னஸ்பர்க்,

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டத்தை தென் ஆப்பிரிக்கா நிறுத்தி வைத்திருந்தது.  இந்த நிலையில், அஸ்ட்ரா செனகா நிறுவன தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கைவிடுவதாக தென் ஆப்பிரிக்கா சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

 தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் திறன் இல்லாததால் அஸ்ட்ரா செனகா நிறுவன தடுப்பூசி திட்டம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஜான்சன் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த தென் ஆப்பிரிக்கா முடிவு செய்துள்ளது. 

Next Story