அமெரிக்காவில் புறப்பட ஓடுபாதையை நோக்கி சென்ற விமானம் சறுக்கி விபத்து
அமெரிக்காவில் புறப்பட ஓடுபாதையை நோக்கி சென்ற விமானம் சறுக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
வாஷிங்டன்
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் 77 பேருடன் அட்லாண்டா புறப்பட தயாராகி ஓடுபாதையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது சாலையிலிருந்து சறுக்கி விமானம் விபத்துக்குள்ளானது. கடும் பனிபொழிவு காரணமாக விமானம் சறுக்கியதாக கூறப்படுகிறது.இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் விமான நிலைய முனையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், இந்தவிபத்தால் விமான நிலைய நடவடிக்கைகளில் எந்த தடையும் ஏற்படவில்லை என பிட்ஸ்பர்க சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.
— Breaking Aviation News & Videos (@breakingavnews) February 11, 2021
Related Tags :
Next Story