அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் இதுபோன்று நடந்தது இல்லை; டிரம்ப் வருத்தம்


அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் இதுபோன்று நடந்தது இல்லை; டிரம்ப் வருத்தம்
x
தினத்தந்தி 14 Feb 2021 1:39 AM GMT (Updated: 14 Feb 2021 1:39 AM GMT)

அமெரிக்க வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் இதுபோன்று நடந்தது இல்லை என டிரம்ப் வருத்தமுடன் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  இதனை தொடர்ந்து, டிரம்ப் பதவி விலக வேண்டியிருந்தது.  ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறிய டிரம்ப், தனது ஆதரவாளர்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது.

பைடனுக்கு அதிபர் பதவிக்கான அதிகாரம் அளிப்பதற்கான மற்றும் சான்றிதழ் வழங்கும் பணிகள் ஆகியவற்றிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  இதனால், ஆவேசமடைந்த டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் வன்முறை ஏற்பட்டது.  போலீசாரின் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன.  வன்முறையை தூண்டி விடும் வகையில் டிரம்ப் பேசினார் என கண்டனம் எழுந்தது.  இதனை தொடர்ந்து அவர் மீது கண்டன தீர்மானம் நிறைவேறியது.

அமெரிக்க செனட் சபையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.  இதில், கடந்த ஜனவரி 6ந்தேதி வன்முறையை தூண்டும் வகையில் பேசிய டிரம்புக்கு எதிராக செனட் சபையை சேர்ந்த குடியரசு கட்சியினர் 7 பேர் வாக்களித்தனர்.

அவர்கள் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து டிரம்புக்கு எதிராக நின்றனர்.  எனினும் அவர் சார்ந்த குடியரசு கட்சியினர் பலர் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.  இதனால், செனட் சபையில் 57-43 என்ற கணக்கில் ஆதரவு வாக்குகளை பெற்ற டிரம்ப் குற்றவாளி இல்லை என தீர்ப்பு கிடைத்து இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

இந்த கண்டன தீர்மான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் டிரம்ப் கூறும்பொழுது, நம்முடைய அமெரிக்க வரலாற்றில் பெரிய சூன்ய வேட்டையின் மற்றொரு கட்டம் இது.  எந்தவொரு ஜனாதிபதிக்கும் இதுபோன்று நடந்தது இல்லை என கூறியுள்ளார்.

அமெரிக்காவை சிறந்த நாடாக மீண்டும் உருவாக்கும் நம்முடைய வரலாற்று சிறப்புமிக்க, தேசப்பற்று நிறைந்த மற்றும் அழகான இயக்கம் தற்பொழுது தொடங்கியுள்ளது என கூறியுள்ளார்.

அதிபராக இருந்த ஒருவருக்கு, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு அதிக அளவாக 7.5 கோடி மக்கள் வரை வாக்களித்தனர் என்பதனை நம்முடைய எதிராளிகள் மறந்து விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story