சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு விலை கொடுக்க நேரிடும் - அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்
சிறுபான்மை மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது உலகளாவிய விமர்சனங்கள் எழுந்துவருகிறது.
இஸ்லாம் சிறுபான்மையினரை சீனாவின் மேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கில் கையாளுவது குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:-
சீனா ஒரு உலகத் தலைவராகவும், பணக்கார நாடாக வேண்டும் என்றும், மற்ற நாடுகளின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதற்காகவும் மிகவும் முயற்சி செய்கிறது. ஆனால், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான செயலில் ஈடுபடும் வரை, அவை அவர்களுக்கு கடினமாக இருக்கும் என கூறினார்
சீனாவின் வலுக்கட்டாய மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் உரிமை பிரச்சினைகள், அதன் ஹாங்காங் ஒடுக்குமுறை, சின்ஜியாங் தடுப்புக்காவல்கள் மற்றும் தைவான் உட்பட சீன நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீது கடுமையான அணுகுமுறையை அமெரிக்கா கையாள்வது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story