லெபனானில் கடும் பனிப்புயல்: நாடு முழுவதும் மின் இணைப்பு துண்டிப்பு
லெபனானில் ஏற்பட்ட பனிப்புயலால் நாடு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பெய்ரூட்,
லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் உயர் மின்னழுத்த இணைப்புகள் பாதிக்கப்பட்டன. இதனால், அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் நாட்டின் மைய மின் வாரியத்துடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.
இதனை அடுத்து மின் வினியோகம் சீரடைவதற்கான பணிகளை பராமரிப்பு பணி குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒட்டுமொத்த லெபனானும் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாகினர்.
Related Tags :
Next Story