பிரேசிலில் ஒரு கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை


பிரேசிலில் ஒரு கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
x
தினத்தந்தி 19 Feb 2021 12:13 AM GMT (Updated: 19 Feb 2021 12:13 AM GMT)

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

ரியோ டி ஜெனிரோ,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,43,400-ஐ தாண்டியுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89.50 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 8.36 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story