அமெரிக்காவில் 6.13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதாக தகவல் + "||" + It is reported that 6.13 crore doses corona vaccines administered in the United States
அமெரிக்காவில் 6.13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதாக தகவல்
அமெரிக்காவில் 6.13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டு அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாடர்னா மற்றும் பைசர்/பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்புசிகள் அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்காவில் இதுவரை 61,289,500 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி 42,809,595 பேர் ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளதாகவும், 17,895,667 பேருக்கு இரண்டாவது டோஸ் கிடைத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் இரண்டு டோஸ்களாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் அமெரிக்க படையினர் முழுவதும் திரும்பப்பெறபடுவர் என அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 99. இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தை, வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.