அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை கடையில் துப்பாக்கி சூடு; 3 பேர் உயிரிழப்பு


அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை கடையில் துப்பாக்கி சூடு; 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Feb 2021 3:46 PM GMT (Updated: 21 Feb 2021 3:46 PM GMT)

அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை கடையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

லூசியானா,

அமெரிக்காவின் லூசியானாவில் மெட்டைரி என்ற பகுதியில் துப்பாக்கி விற்பனை கடை ஒன்று உள்ளது.  இது நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வடமேற்கே சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், கடையில் இருந்த நபர் ஒருவர் திடீரென 2 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் பெண் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் வேறு 2 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களது நிலைமை சீராக உள்ளது.  துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் வாடிக்கையாளர்களாகவோ, ஊழியர்களாகவோ அல்லது தனி நபர்களாகவோ இருக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.  கொல்லப்பட்ட 3வது நபர் துப்பாக்கியால் சுட்டவர் என்றும் கூறப்படுகிறது.  இதுபற்றி நியூ ஆர்லியன்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story