ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் + "||" + Australian Prime Minister Scott Morrison has been vaccinated against corona
ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ஒரு சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசு கொரோனா வைரசை சிறப்பாக கையாண்டு வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
கான்பெர்ரா,
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ஒரு சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசு கொரோனா வைரசை சிறப்பாக கையாண்டு வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இங்கு தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் நாட்டில் கொரோனா வைரசின் 2-வது அலை ஏற்படாமல் தடுப்பதற்கு பிரதமர் ஸ்காட் மாரிசன் அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் ஆஸ்ட்ரஜெனகா நிறுவனம் தயாரித்துள்ள 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று தொடங்கின.
முதற்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 84 வயதான ஜேன் மாலிசியாக் முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதேபோல் அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த தொற்று நோயில் இருந்து நாம் மீள்வதற்கான ஒரு முக்கியமான நாள் இன்று. ஆஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாகவும், தன்னார்வமாகவும் உள்ளன. மேலும் இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை நமது சொந்த மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் வசதி, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மேற்கொண்ட பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றை ஒரே இடத்தில் அதாவது மராட்டிய தலைநகர் மும்பையில் உள்ள 4 ஸ்டேடியங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.