பிரான்சில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,064 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ்,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து அதிக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்தது.
இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 20,064 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,29,891 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் அங்கு மேலும் 341 பேர் உயிரிழக்க, பலியானோர் மொத்த எண்ணிக்கை 85,044 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,52,083 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 32,92,764 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story