பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,
பிரிட்டனை உலுக்கி எடுத்து வரும் உருமாறிய கொரோனா பாதிப்பு , இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தொற்று பாதிப்பும் கணிசமாக பரவி வருகிறது. பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 345- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,22,415- ஆகும். பிரிட்டனில் இதுவரை 19.1 மில்லியன் பேருக்கு தடுப்பூசியின் முதல் தொகுப்பு போடப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது கொரோனா அச்சம் காரணமாக 3-வது கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.
Related Tags :
Next Story