இத்தாலியில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இத்தாலியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,55,434 ஆக அதிகரித்துள்ளது.
ரோம்,
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி 8-ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்து 55 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 343 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 98 ஆயிரத்து 288 ஆக உள்ளது.
அதே சமயம் இத்தாலியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.26 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது இத்தாலியில் சுமார் 4.30 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story