கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல்: கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை


கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல்: கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 March 2021 12:12 AM GMT (Updated: 4 March 2021 12:12 AM GMT)

கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறி கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை எடுத்தது.

சார்ஜா,

சார்ஜா பகுதியில் ஆங்காங்கே சிலர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து போலீசார் சார்ஜாவின் பல்வேறு பகுதிகளிலும் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது சார்ஜாவில் உள்ள மைதானம் ஒன்றில் கிரிக்கெட் விளையாடிய 13 பேர் பிடிபட்டனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. இதனைப் பார்த்த போலீசார் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்ற செயல்பாடுகளால் கொரோனா பாதிப்பு அதிக கூடும் என எச்சரித்தனர். மேலும் கிரிக்கெட்ட விளையாடிய 13 பேருக்கும் அபராதம் விதித்தனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய பேட் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் தொடர்ந்து பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காமல் விளையாட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மைதானங்களில் வார இறுதி நாட்களில் பலர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற செயல்பாடுகளை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.


Next Story