அல்ஜீரியாவில் வெள்ளப்பெருக்கு; 7 பேர் பலி
அல்ஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
அல்ஜீர்ஸ்,
அல்ஜீரியா நாட்டின் வடபகுதியில் கிளெப் மாகாணத்தில் கனமழை பொழிந்ததில் மெக்னெஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளத்தில் 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் சிக்கி பலியாகி உள்ளனர்.
ஆற்று வெள்ளத்தில் 3 கார்கள் அடித்து செல்லப்பட்டு விட்டன. இதுதவிர காணாமல் போன 3 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் அப்துல் மத்ஜித் டெப்பாவுன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story