கடந்த 3 நாட்களில் ஓமனில் 1,059 பேருக்கு கொரோனா பாதிப்பு 8 பேர் பலி


கடந்த 3 நாட்களில் ஓமனில் 1,059 பேருக்கு கொரோனா பாதிப்பு 8 பேர் பலி
x
தினத்தந்தி 7 March 2021 10:36 PM GMT (Updated: 7 March 2021 10:36 PM GMT)

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மஸ்கட்,

ஓமனில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,059 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 955 ஆக உயர்ந்துள்ளது.

இதில் கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 823 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சதவீதம் 93.3 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 நாட்களில் 8 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,591 ஆக அதிகரித்தது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 77 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story