எங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா- ஜப்பான் நிறுத்த வேண்டும்; சீனா
எங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்காம்m ஜப்பானும் நிறுத்த வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் கிழக்கு மற்றும் தென் சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது குறித்த தங்களின் பொதுவான கவலைகள் பற்றி தீவிரமாக விவாதித்தனர்.
இருநாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையிலும் சீனா குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், தங்கள் நாட்டு உள் விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்காவும் - ஜப்பானும் நிறுத்த வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story