மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 91 பேர் சுட்டுக்கொலை


மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள்  91 பேர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 27 March 2021 4:18 PM GMT (Updated: 27 March 2021 4:18 PM GMT)

மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 91 பேர் சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

யாங்கோன்

மியான்மரின் பாதுகாப்புப் படையினர் இன்று மட்டும்   64 பேரை சுட்டுக் கொன்று உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

மியான்மரின் இரண்டாவது நகரமான மாண்டலேயில் சுட்டுகொல்லபட்ட 13 பேரில் ஐந்து பேர் இளைஞர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதியம் 2.30 மணியளவில் நாடு முழுவதும் மொத்தம் 91 பேர் கொல்லப்பட்டதாக மியான்மர் நவ் செய்தி போர்டல் தெரிவித்துள்ளது. 

மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கோனின் இன்சீன் மாவட்டத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் 21 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர  ஒருவர் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஒருவர்  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இராணுவம் மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடும் என்றும் கூறிய ஜெனெரல் மின் ஆங் ஹேலிங் கூறிய மறுநாளே, அவரின் கூற்றுக்கு முரண்பாடாக இந்த மிருகத்தனமான தாக்குதல்  நடந்து உள்ளது. மியான்மரின் ஆயுதப்படை தினத்தை கொண்டாடவிருப்பதால், அதற்கு இடையூறு செய்யும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது தலையில் அல்லது பின்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என நேற்று ராணுவம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நினையில், மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று உண்மையில் "வெட்கக்கேடான நாள்" என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களால் உருவாக்கப்பட்ட போராட்டக் குழுவான சிஆர்பிஎச்-ன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இதுவரை 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவ ஆட்சியின் பாதுகாப்பு படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story