தைவானில் சுரங்கப்பாதையில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு


தைவானில்  சுரங்கப்பாதையில் ரெயில் தடம் புரண்டதில்  பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு
x
தினத்தந்தி 2 April 2021 11:44 AM GMT (Updated: 2 April 2021 11:44 AM GMT)

தைவான் கிழக்கு பகுதியில் சுரங்கப்பாதையில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது



கிழக்கு தைவானில் ஒரு சுரங்கப்பாதையில் இன்று  காலை490 பயணிகளுடன்  சென்ற ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது 75 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 

போக்குவரத்து அமைச்சகம் குறைந்தது 72 பயணிகள் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும்  சுரங்கபாதைக்கௌள்ள் அதிகமானபேர் சிக்கி இருப்பதாகவும் கூறி உள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பொறியியல் பராமரிப்பு குழுவுக்கு சொந்தமான ஒரு லாரி மீது ரெயில் மோதிதடம் புரண்டதாக உருண்டது என்று தைவான் ரெயில்வே தெரிவித்துள்ளது.

எட்டு பெட்டிகளுடன் ரெயில் தைதுங் செல்லும் வழியில் 490 பயணிகளுடன்  காலை 9:28 மணிக்கு (01:28 GMT) ஹூலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் சென்றதாக தைவான் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு தைவானின் புகழ்பெற்ற டாரோகோ ஜார்ஜுக்கு அடுத்ததாக ஹூலியன் ஒரு பிரபலமான இயற்கை நகரமாகும், மேலும் தைவானின் கிழக்கு ரெயில் பாதை ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகும் இதன்  வியத்தகு கடற்கரை சாலை மற்றும் இயற்கைக்காட்சி பார்க்க அழகாக இருக்கும். 

டுவிட்டரில், தீவின் தலைவர் சாய் இங்-வென், பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்களை மீட்பதற்கும் உதவுவதற்கும் அவசர சேவைகள் அனுப்பப்பட்டு உள்ளன இந்த இதயத்தை உடைக்கும் சம்பவத்தை அடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்வோம்," என்று அவர் கூறினார்.

தைவானில்  2018 இல் கிழக்கு தைவானின் யிலானில் ஒரு பயணிகள் ரெயில் தடம் புரண்டு 18 பேர் உயிரிழந்தனர்.

1990 ஆம் ஆண்டில், மியாவோலியில் இரண்டு ரெயில்கள் மோதியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Next Story