வங்காளதேசத்தில் ஒருவாரத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு
வங்காளதேசத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்வையடுத்து ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா,
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. வங்காளதேசத்தில் கடந்த வியாழக்கிழமை 6,469- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,24,594- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வால் அந்நாட்டில் ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 5 ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என வங்காளதேச அரசு அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள தடை எதுவும் இல்லை எனவும் தொழிற்சாலைகள் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி இயங்கலாம் எனவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story