இங்கிலாந்தில் மாடர்னா கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி


இங்கிலாந்தில் மாடர்னா கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி
x
தினத்தந்தி 8 April 2021 1:27 AM GMT (Updated: 8 April 2021 1:27 AM GMT)

இங்கிலாந்தில் மாடர்னா கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லண்டன்

அமெரிக்க நிறுவனமான மாடர்னா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து தங்கள் நாட்டு மக்களுக்கு நேற்று முதல் செலுத்தத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே ஃபைஸா்-பயோன்டெக் மற்றும் ஆக்ஸ்ஃப்போர்டு அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டத்தில் 3-ஆவது மாடா்னா தடுப்பூசிகள் இணைந்துள்ளன.  காமாஷ் தன்ஷையா், வேல்ஸ் ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த மருத்துவமனைகளின் நோயாளிகளுக்கு முதல்முறையாக  மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

Next Story