நார்வே நாட்டில் கொரோனா விதிகளை பின்பற்றாத பிரதமருக்கு அபராதம் விதிப்பு
நார்வே நாட்டில் கொரோனா விதிகளை பின்பற்றாத பிரதமருக்கு 20 ஆயிரம் நார்வே கிரவுன்ஸ் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில், கொரோனா விதிகளை மதிக்கத்தவறிய அந்நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்-க்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
நார்வே நாட்டில் இருமுறை பிரதமராக பதவி வகித்துள்ள எர்னா சொல்பேர்க் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார்.நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், 10- க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லைஎன்று நார்வே அரசு அறிவித்தது.
ஆனால், இந்த கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்ப உறுப்பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளைக் கொண்டாடியதால் பிரதமருக்கு 20 ஆயிரம் நார்வே கிரவுன்ஸ் தொகையை அபராதமாக போலீசார் விதித்துள்ளார். நார்வே நாட்டில் இதுவரை 1,01,96- கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story