இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
x

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜகார்தா,

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  கிழக்கு மாகாணத்தில் உள்ள மலாங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 

நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாறைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   இந்தோனேசியாவில் கடந்த 2018- ஆம் ஆண்டு   7.5 என்ற அளவில்   கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 4,300 பேர் உயிரிழந்தனர். 


Next Story