ரமலான் மாதம்: சார்ஜாவில் பொது நூலகம் செயல்படும் நேரம் அறிவிப்பு
ரமலான் மாதம்: சார்ஜாவில் பொது நூலகம் செயல்படும் நேரம் அறிவிப்பு.
சார்ஜா,
சார்ஜா பொது நூலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சார்ஜாவில் உள்ள பொது நூலகம் ரமலான் மாதத்தையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். நோன்பு திறந்ததற்கு பின்னர் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படும்.
சார்ஜாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள நூலகங்கள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story