மலேசியாவில் மேலும் 2,551- பேருக்கு கொரோனா
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்,
மலேசியாவில் ஒரே நாளில் 2,551- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆகும்.
மலேசியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 1,365- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று குணம் அடைந்து 1,524- பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்புடன் 18,600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 227- பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Related Tags :
Next Story