ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா


ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 April 2021 7:26 PM GMT (Updated: 17 April 2021 7:26 PM GMT)

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்க் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெஹ்ரான்,

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 21,312- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து15 ஆயிரத்து 445- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 319- பேரும் இதுவரை 66 ஆயிரத்து 327- பேரும் உயிரிழந்து இருப்பதாக ஈரானின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஈரானில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இது முந்தைய கொரோனாவை விட 70 சதவீதம் வீரியமிக்கது என அந்நாட்டு சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். 


Next Story