பிரிட்டனில் மேலும் 1,882- பேருக்கு கொரோனா தொற்று
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,882- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்
பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், அங்கு கட்டுப்பாடுகளும் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார்.
அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 43.87 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 270 ஆக உள்ளது.
Related Tags :
Next Story