இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு


இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 April 2021 9:37 PM GMT (Updated: 21 April 2021 9:37 PM GMT)

இலங்கையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியாவிடம் இருந்து பெற்ற கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவர்களில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனேகா கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை இலங்கை சுகாதாரத்துறை மந்திரி பவித்ரா வன்னியரச்சி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், ரத்த உறைவுக்கு அந்த தடுப்பூசி காரணம் அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார். சீரம் இன்ஸ்டிடியூட்டிடம் கேட்டிருந்த மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story