2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு


2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு
x
தினத்தந்தி 22 April 2021 2:45 AM GMT (Updated: 22 April 2021 2:45 AM GMT)

விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாஸ்கோ, 

தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதில் கைகோர்த்தன.

தற்போது மேற்கூறிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பல்வேறு விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளுடன் பதற்றம் நீடித்து வரும் சூழலில் ரஷியா தனக்கென சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு செய்துள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தொடர்பாக பிற நாடுகளுடன் ரஷியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் வருகிற 2024-ம் ஆண்டுடன் காலாவதியாகிறது. இந்த சூழலில் தான் 2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

அதே சமயம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியேறுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் 2024-க்கு அப்பால் ஒத்துழைப்புக்கான படிவங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் போது, இதுபற்றி முடிவு செய்யப்படும் என்றும் ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

Next Story