அமீரகத்தில் ஒரே நாளில் 1,772 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி


அமீரகத்தில் ஒரே நாளில் 1,772 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
x
தினத்தந்தி 3 May 2021 8:40 PM GMT (Updated: 3 May 2021 8:40 PM GMT)

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 940 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,772 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 795 ஆக அதிகரித்தது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,769 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 6 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17 ஆயிரத்து 951 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அமீரகத்தில் இதுவரை 4 கோடியே 46 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை தன்னார்வத்துடன் வந்து போட்டுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story