துருக்கியில் புதிதாக 15,191 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 283 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 May 2021 11:06 PM GMT (Updated: 9 May 2021 11:06 PM GMT)

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்காரா,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இதனிடையே துருக்கி நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் 2-வது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தநிலையில் தற்போது தொற்றின் பாத்ப்புகள் குறைய தொடங்கி உள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் துருக்கி தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 15,191 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் துருக்கி நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,31,332 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 283 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 43,029 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47,16,918 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 2,71,385 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Story