வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு


வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு
x
தினத்தந்தி 17 May 2021 12:38 AM GMT (Updated: 17 May 2021 12:38 AM GMT)

வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் மே 23 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 5 ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்ட வங்காளதேச அரசு 16 ஆம் தேதி அமலில் இருக்கும் என அறிவித்தது. 

இந்த நிலையில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 363-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story