அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி; 8 பேர் காயம்
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர்.
மின்னபோலிஸ்,
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் நைட்கிளப் அருகே நடந்த வாக்குவாதத்தில், கூட்டத்தில் இருந்த 2 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
இதுபற்றி காவல் துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த மற்ற 7 பேரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்து உள்ளது.
இதுபோன்று நகரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். அவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்து விட்டார்.
Related Tags :
Next Story