பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு


பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 23 May 2021 7:23 AM GMT (Updated: 23 May 2021 7:23 AM GMT)

பிலிப்பைன்ஸில் இன்று காலை 10.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியது.  காலை  10.02 மணியளவில் பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.   

இந்த நிலநடுக்கம் கியாம்பா உள்ளிட்ட பல நகரங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.  பிலிப்பைன்ஸில் கடந்த 2019 அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 7 பேர் பலியாகினர். 215 பேர் காயமடைந்தனர்.

Next Story