பிரான்சில் பெண் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து


பிரான்சில் பெண் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 28 May 2021 6:03 PM GMT (Updated: 28 May 2021 6:03 PM GMT)

பிரான்சில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற நபரை போலீசார் சுற்றிவளைத்தனர்.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ளன. மேலும் அடுத்த ஆண்டு அதிபா் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கு உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல்துறை மீதான தாக்குதல் பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 

மேற்கு பிரான்சில் உள்ள லா சபெல்லே என்ற இடத்தில் பெண் போலீஸ் அதிகாரியை ஒரு நபா் திடீரென கத்தியால் குத்திவிட்டு, அவரது துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பினாா். இதனை தொடர்ந்து ஹெலிகாப்டா்கள் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி அந்த நபா் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்தனா். 

அப்போது அந்த நபா் துப்பாக்கியால் சுட்டதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனா். பின்னா், அந்த நபரை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். கைது முயற்சியின்போது காயமடைந்த அந்த நபா் உயிரிழந்தாா். தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தாக்குதலில் ஈடுபட்ட நபா் பிரான்ஸ் நாட்டை சோந்தவா் எனவும், ஏற்கனவே அவா் சந்தேகப்படும் நடவடிக்கைகள் காரணமாக போலீசாரின் கண்காணிப்புப் பட்டியலில் இருந்தாா் எனவும் உள்துறை அமைச்சா் ஜெரால்டு டாா்மானியன் தெரிவித்துள்ளார்.

Next Story