இத்தாலியில் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் பயணிகளுக்கான தடை நீட்டிப்பு


இத்தாலியில் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் பயணிகளுக்கான தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 31 May 2021 12:54 AM GMT (Updated: 31 May 2021 12:54 AM GMT)

இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளில் இருந்து இத்தாலி செல்லும் பயணிகளுக்கான தடை ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரோம்,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது காரணமாக பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்தது. இந்த சூழலில் இந்தியாவில் இருந்து பயணிகள் இத்தாலி வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட இந்த தடையானது, மே 31-ம் தேதியுடன் முடிவுக்கு வர இருந்தது.  

இந்நிலையில், இந்தியாவில் தொற்று பரவல் குறையாததால் வரும் ஜூன் 21-ம் தேதி வரை இந்த பயண தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தவிர இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வருவதற்கும் ஜூன் 21 வரை  தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story