நேபாளத்தில் ஒரே நாளில் 4,178- பேருக்கு கொரோனா பாதிப்பு


நேபாளத்தில்  ஒரே நாளில் 4,178- பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 31 May 2021 5:25 PM GMT (Updated: 31 May 2021 5:25 PM GMT)

நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,178- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காத்மாண்டு,

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 4,178- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாளத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 61 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  

ஒரே நாளில் 114- பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 6491 பேர் குணம் அடைந்துள்ளனர். நேபாளத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் விகிதம் 79.7 சதவிகிதமாக உள்ளது. 

Next Story