அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 13 பேர் படுகாயம்


அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 13 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Jun 2021 2:09 PM GMT (Updated: 12 Jun 2021 2:09 PM GMT)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகாயமடைந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அகஸ்டின் நகரின் 6-வது தெரு பகுதியில் மதுபான விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் அமைந்துள்ளது. அப்பகுதியில் அந்நாட்டு நேரப்படி, இன்று அதிகாலை 1.25 மணியளவில் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்தர்கள் மீது மர்மநபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால், அந்த நபர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் அந்த நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றார். இந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகாயமடைந்தனர்.  

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த 13 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு நடத்திவிட்டு தப்பிச்சென்றது யார்? என்பது குறித்தும், துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுபான விடுதிக்கு வந்தவர்களில் நண்பர்கள் சிலருக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story