பாகிஸ்தானில் மழை, பலத்த காற்றுக்கு 5 பேர் பலி


பாகிஸ்தானில் மழை, பலத்த காற்றுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 12 Jun 2021 10:53 PM GMT (Updated: 12 Jun 2021 10:53 PM GMT)

பாகிஸ்தானில் பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று வீச்சில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.

கைபர் பக்துன்க்வா,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் நேற்றிரவும், இன்றும் (ஞாயிற்று கிழமை) கனமழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததில் 8 வீடுகள் இடிந்து விழுந்தன என மாகாண பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது.  மழை மற்றும் பலத்த காற்றுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.  6 பேர் காயமடைந்து உள்ளனர்.

அந்த மாகாணத்தில் பெய்து வரும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சித்ரால் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகள் அடைப்பட்டு உள்ளன.  அனைத்து பகுதிகளிலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story