ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 33 பேர் பலி


ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 33 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jun 2021 12:27 AM GMT (Updated: 16 Jun 2021 12:27 AM GMT)

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமனில் நேற்று ஒருநாளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 566 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 570 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 64 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 33 பேர் பலியானார்கள். இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 565 ஆக அதிகரித்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 374 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story