உகான் நகரில் முககவசம் -சமூக இடைவெளி இன்றி பட்டமளிப்பு விழாவில் 11,000 மாணவர்கள்
உகான் நகரில் முககவசம் -சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட 11,000 மாணவர்கள்
பீஜிங்
கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் உகான் நகரில் 18 மாதங்களுக்குப் பிறகு, 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான உகானில் தான் உலகின் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது உலகமே கொரோனா தொற்று பீதியில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கத்தையும் அறிவித்து நடைமுறைப்படுத்திவரும் சூழல்நிலையில், சீனாவின் உகான் நகரில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதை காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மத்திய சீனாவின் நார்மல் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
More than 11,000 students took part in a massive graduation ceremony in Wuhan, 18 months after the city was battered by the first global outbreak of COVID-19. pic.twitter.com/yS6V28kbSI
— DW News (@dwnews) June 15, 2021
Related Tags :
Next Story