பிரேசில்: கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,335 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
பிரசிலியா,
தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது. இந்த நிலையில், பிரேசிலில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 74,237பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்னிக்கை 1 கோடியே 77 லட்சத்து 04 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 2,335 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story