பிரேசில்: கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,335 பேர் உயிரிழப்பு


பிரேசில்: கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,335 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 Jun 2021 2:06 AM GMT (Updated: 18 Jun 2021 2:06 AM GMT)

பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

பிரசிலியா,

தென்அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக பிரேசில் உள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா உயிரிழப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலும், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3-வது இடத்திலும் பிரேசில் உள்ளது. இந்த நிலையில், பிரேசிலில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. 

 பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 74,237பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்னிக்கை 1 கோடியே 77 லட்சத்து 04 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 2,335  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது. 


Next Story