இலங்கையில் நாளை முதல் பயணக்கட்டுப்பாடுகள் தளர்வு
இலங்கையில் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையையும் மீறி நாளை முதல் பயணக்கட்டுபாடுகள் தளர்த்தப்பட உள்ளன.
கொழும்பு,
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, கடந்த மே 21 ஆம் தேதி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 21 ஆம் தேதி முதல் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், மாகணங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை தற்போதைக்கு தளர்த்த வேண்டும் என்று இலங்கை மருத்துவ நிபுணர் குழு வேண்டும் கோள் விடுத்திருந்தது. எனினும், மருத்துவ நிபுணர் குழுவின் எச்சரிக்கையும் மீறி இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன.
Related Tags :
Next Story