வங்காள தேசத்தில் இன்று 3,641- பேருக்கு கொரோனா


வங்காள தேசத்தில் இன்று 3,641- பேருக்கு கொரோனா
x

வங்காளதேசத்தில் இன்று 3,641- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டாக்கா, 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் இன்று 3,641-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 82- பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் ஏண்ணிக்கை 8 லட்சத்து 51 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,548- ஆக அதிகரித்துள்ளது.  

தொற்று பாதிப்பை கண்டறிய 22,231- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  வங்காளத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.59-சதவிகிதமாக உள்ளது. மீட்பு விகிதம் 91.90 சதவிகிதமாக உள்ளது.  வங்காளதேசத்தில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி 7,626- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவேயாகும். 

Next Story