கொலம்பியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Jun 2021 12:31 AM GMT (Updated: 21 Jun 2021 12:31 AM GMT)

கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,818 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

போகோடா,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இதுவரை உலக அளவில் 17.92 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 38.81 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் கொலம்பியா 10-வது இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் கொலம்பியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொலம்பியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 39,45,166 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 599 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 934 ஆக உயர்ந்துள்ளது.

கொலம்பியாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 36,67,161 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,78,071 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story