வங்காளதேசத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அங்கு கடந்த 1ந் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
டாக்கா,
நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அங்கு கடந்த 1ந் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைய இருந்தது. இந்த நிலையில் நேற்று அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 9 ஆயிரத்து 964 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 164 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
இதுவரை இல்லாத வகையில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியது முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசை கொண்டு சென்றது. அதன்படி நாளையுடன் முடிவடைய இருந்த நாடு தழுவிய முழு ஊரடங்கை வருகிற 14-ந் தேதி வரை, மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story