ரஷ்யாவில் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு


ரஷ்யாவில் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 10 July 2021 5:05 PM GMT (Updated: 10 July 2021 5:05 PM GMT)

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 752 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மாஸ்கோ,

ரஷ்ய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 57,58,300 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் மாஸ்கோவில் மட்டும் இன்று 5,694 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 752 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,42,253 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி ரஷ்யாவில் 4,33,210 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 17,759 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51,82,837 ஆக உயர்ந்துள்ளது.

Next Story