ஆஸ்பத்திரியில் இருந்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் திரும்பினார்


ஆஸ்பத்திரியில் இருந்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் திரும்பினார்
x
தினத்தந்தி 15 July 2021 2:03 AM GMT (Updated: 15 July 2021 2:03 AM GMT)

அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்குப் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் திரும்பினார்.

ரோம்,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெருங்குடல் பிரச்சினை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.‌

அங்கு அவருக்கு கடந்த 4-ந்தேதி அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது குறைந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் ஆஸ்பத்திரியிலேயே தினசரி பிரார்த்தனை மற்றும் ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்குப் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் திரும்பினார். கெமல்லி ஆஸ்பத்திரியில் இருந்து தனது சொகுசு காரில் புறப்பட்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் செல்வதற்கு முன்பாக ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா மாகியோர் பேராலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

பொதுவாக அவர் வெளிநாடு பயணங்களை முடித்துவிட்டு ஊர் திரும்பும் போது இந்த பேராலயத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம். போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருகிற செப்டம்பர் 12 முதல் 15 வரை ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story