பாகிஸ்தான் முன்னாள் தூதர் மகள் சுட்டுக்கொலை


பாகிஸ்தான் முன்னாள் தூதர் மகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 22 July 2021 12:14 PM GMT (Updated: 22 July 2021 12:14 PM GMT)

ஜாபருடனான உறவை துண்டித்து கொண்டதால் ஜாபர் என்பவர் நூரை கொலை செய்து உள்ளார்

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் முன்னாள் தூதர் சவுகத் அலி முகதாமின் மகள் நூர் முகாதம் (27) செவ்வாய்க்கிழமை இரவு இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சவுகத் அலி முகாதம்  தென் கொரியாவில் பாகிஸ்தானின் தூதராக இருந்துள்ளார். கஜகஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

இதுதொடர்பாக,  ஜாகீர் ஜாபர் என்ற நபரும், நூரின் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.குற்றம்சாட்டப்பட்ட ஜாபர், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மகன் ஆவார்.

ஜாபருடனான உறவை நூர் துண்டித்து கொண்டதால் ஜாபர் நூரை கொலை செய்து உள்ளார்.கொலையாளி போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவருக்கு உளவியல் பிரச்சினைகள் இருப்பதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

Next Story